இலங்கையோடு இந்திய தேசிய கீதம் முற்றாக வேறுபட்டு நிற்கிறது. வங்கமும், திராவிடமும், மராட்டியமும் , உஜ்ஜையைனியும் இணைந்த பன்மொழி பேசும் மக்களின் ஒற்றுமைப் பாடலாக இந்திய தேசிய கீதம் அமைந்துள்ளது. இலங்கையின் தேசிய கீதம் மண்ணைப் பற்றி பாடுகிறது. மரத்தை, மலர்களை, அழகைப்பற்றிப் பாடுகிறது. ஆனால், மனிதனைப் பற்றிப் பாடுவதை நிறுத்திக்கொள்கிறது. மனிதனைப் பற்றிப் பாடினால், சிங்கள மனிதனும் தமிழ் மனிதனும் ஒற்றுமையுடன் வாழ்க என்று வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் வந்து விடும். இதனால், மனிதரைப் பாடுவதையே கள்ளத் தனமாக நிறுத்திக் கொண்டுவிட்டது இலங்கையின் தேசிய கீதம்.
இன்றைய முகாமில் சித்ரவதிக் கைதிகளாக உள்ள இந்த இளைஞர்கள், இலங்கையின் வலிமை மிக்க ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள். என்ஹா தேசியக் கொடியின் அரசியல் தவறு என்றும், அதற்கு நாங்கள் அடிபணிய முடியாது என்றும் ஆயுதம் தூக்கினர்களோ அந்த மொழி புரியாத பாடல்களைப் பாடி, அந்தக் கோடியை வணங்க வேண்டும் என்று துப்பாக்கி முனையில் இப்போது வற்புறுத்தப் படுகிறார்கள். இதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். மறுக்கிறார்கள். சித்ரவதை முகாம் இந்த இளைஞர்களைத் தேசத் துரோகிகளாக அறிவிக்கிறது. ஆத்திரம் அடைந்த இனவெறி ராணுவம், இவர்களைச் சித்ரவதை முகாமுக்கு இழுத்துச் செல்கிறது. அங்கு விரல் நகங்களில் ஊசி ஏற்றப்படுகின்றன. கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு, உடலுக்கு உள்ளேயே, எலும்புகள் முறிந்து விழுகின்றன. மின் அதிர்ச்சியால் மீண்டும் மூட முடியாமல் அப்படியே நின்று போகின்றன விழி ஓர இமைகள்.
மண்ணுரிமை மூச்சை நெஞ்சில் சுமந்த அந்த இளைஞர்கள் தனது இறுதி மூச்சையும் நிறுத்திக் கொள்கிறார்கள். மரணமுற்ற உடல், ஒவ்வொன்றாக சேகரித்து மறைவான இடங்களில் வைக்கப்பட்டு, நள்ளிரவில் எடுத்துச் செல்லப் படுகின்றன. அந்த உடல்கள் ஒவ்வொனுன்றும் சமரசமற்று, உரிமைக்காகப் போராடிய போராட்ட உணர்வுகளை மட்டும் சொல்லவில்லை. அந்த உடல்களின் மீது நடத்தப்பட்ட ஒரு நூறு சித்ரவதைக் கொடுமைகளை சொல்லிவிட்டுத்தான் செல்கின்றன.
விடுதலைப் புலிகளின் ராணுவம் சாராத பணிகளில் பங்கேற்று இருத்த ஒருவரின் கதை இது. அனாதைப் பெண் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப் பட்டு உள்ளது. இந்தப் பணியை மிகுந்த மனநிறைவுடன் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார். அந்தக் காலம் தனக்கான வசந்த காலம் என்று இப்போதும் அவரால் கூற முடிகிறது. பராமரிப்பு இல்லத்தில் பணியாற்றும் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்கிறார். பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. முள்ளி வாய்க்கால் நிகழ்வின்போது குழந்திக்கு ஒரு வயது நிறைவு பெறுகிறது. போரின் இறுதி நாட்களில் கணவனையும் மனைவியும் பிரிதுவிடுகிரார்கள். குழந்தை மனைவியிடம் உள்ளது.
சித்ரவதை முகாம் ஒன்றுக்கு, இவன் இழுத்துச் செல்லப்படுகிறான். புலிப் படையில் ஆயுதம் தாங்கிக் களத்தில் இவன் நின்றதாகப் பதிவு செய்து கொள்கிறார்கள். சித்ரவதைகளைவிடவும் பெரும் வதையில் மனம் சிக்கிச் சின்னாப் பின்னமாகிறது. மனைவி, குழந்தை இருவரின் நிலை என்னவாக இருக்கும் என்ற நினைவில், மனதளவில் ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கிறான். நம்பிக்கை யுடனும் நம்பிக்கை அற்றும் இவனது வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது.
முகாமில் இருந்து, இவனைத் தப்பிக்க வைக்க, ரகசிய ஏற்பாடு ஒன்று நடை பெறுகிறது. கட்டுக் காவல்கள் எல்லாவற்றையும் கடந்து செல்லுதல் அத்தகைய சுலபமானது அல்ல என்றாலும், அவனுக்குச் சொல்லாப்பட்ட அந்த வழிமுறைகளில் எப்படியும் தப்பிச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை அவனுக்குத் தந்து விட்டது. தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்குரிய முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன.
நள்ளிரவு. முகாமில் இருந்து பிரிந்து தனியாக நிற்கிறான். மன படபடப்புக்கு இடையில் ஒரு சிறு சத்தம், ஒரு வாகனம் வருவதைப் போல உணர்கிறான். அந்த வாகனம் எதுவாக இருக்கும்...தன்னிடம் சொலப்பட்ட வாகனம் தானா? அல்லது முகாமின் நள்ளிரவு அதிரடி கண்காணிப்பு வாகனமா? அவனுக்குச் சிறிது கலக்கம் வந்து விடுகிறது. வாகனம் மிகச் சரியாக அவன் அருகில் வந்து நிற்கிறது. அது ராணுவத்தினர் பயன்படுத்தும் வாகனம்தான். அவன் தப்பித்து செல்வதற்கு என்னென்னே செய்ய வேண்டும் என்பது அவனுக்கு முன்னரே தெரிவிக்கப் பட்டு இருந்தது. அதன்படியே அவன் சதம் எதுவும் இன்றி அந்த வாகனத்தில் ஏறிப் படுத்துக் கொள்கிறான். ஏதோ பொருட்கள் அடுக்கி வைக்கப் பட்டு இருந்த லாரி போன்ற வாகனம் அது.
முகாம் நான்கு அடுக்குப் பாதுகாப்பு வளையங்களைக் கொண்டது. இவை அனைத்தையும் கடந்து சென்ற பின்புதான், அவனுக்கு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்படுகிறது. எப்படித் தூக்கம் வந்தது என்றே தெரியவில்லை. தூங்கிப் போனான். திடீர் என்று ராணுவ வாகனம் குலுங்கி நிற்கிறது. கொஞ்சம் வெளிச்சம் தெரிவதில் இருந்து அதிகாலை என்பதை உணர்ந்து கொள்கிறான். சுற்றிப் பார்த்தபோது அது ஒரு காட்டுப் பகுதி என்பதை உணர்ந்து கொள்கிறான். டார்ச் லைட் ஒன்றின் வெளிச்சம் காட்டி, அவனை வாகனத்தில் இருந்து இறங்கச் சொல்லி, ஒருவன் சைகை காட்டுகிறான். தான் இரவெல்லாம் பயணம் செய்த வாகனத்தை வெளிச்சத்தில் கூர்ந்து கவனித்தான். மின்சாரம் தாக்கியதைப் போல, நிலை குலைந்து போனான்.
அவனைக் கொண்டு வந்த அந்த வாகனத்தில் இறந்துபோன மனித உடல்கள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கின்றன. எண்ணிக்கையில் 20 க்கும் குறையாது. அவன் இறங்கிக் கொள்கிறான். இங்கு இருந்துதான் அவன் தப்பி செல்ல வேண்டு. அவனால் நடக்கவ்யும் முடியவில்லை. ஓடவும் முடிய வில்லை. அடர்ந்த காட்டில் இருந்து எவ்வாறு, யார் கண்ணிலும் படாமல் வெளியேறுவது என்பதைவிடவும், அந்த நள்ளிரவில் தன்னோடு பயணித்த அந்த உடல்களைப் பற்றியே எண்ணம். சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இவர்கள் அனைவருமே போராளிகள். தன்னுடன் நண்பனாக, தோழனாக, சகோதரனாக வாழ்ந்த உறவுகள்தான். எதனை வீரம் நிறைந்தவர்கள்? அவனது சிந்தனை அதற்கு மேல் செயல்பட மறுத்துவிட்டது. இவை எல்லாவற்றையும் விட வேறொரு கவலைதான் அவனை வதைத்து எடுக்கத் தொடங்கி விட்டது. பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட தன சக பெண் போராளிகளும் கட்டாயம் இதில் இருந்து இருப்பார்கள் என்பதை நினைக்கும்போது, குளிர் நிறைந்த அந்த அதிகாலையிலும் உடல் வியர்க்கத் தொடங்கியிருந்தது. காலச் சக்கரங்களின் கூறிய பற்களில் ஏன் தமிழ்ச் சமூகம் சிதைக்கப்பட வேண்டும் என்று அவன் யோசிக்கிறான்?
(இன்னும் விதைப்போம்)



கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ReplyDeleteஒரு சுகம் வருமா வருமா
சொர்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா வருமா
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே
அறிவு...உன் கவிதை சுடர் விட்டுப் பிரகாசிக்கட்டும்...புது ஈழம் மலர துணை புரியட்டும்...வெல்க தமிழ் ஈழம்..!
ReplyDelete