Friday, October 14, 2011

இரு நண்பர்களுக்கான உரையாடலில் இருந்து...

சசி : இந்தியாவிற்கு எப்படி சுதந்திரம் கிடைக்க அப்போ எப்படியெல்லாம் கஷ்டப்பட்டமோ அப்படி தமிழ் ஈழம் கிடைக்க நம்மாலான உதவியை செய்யணும்...ஆங்கிலேயன் செஞ்சதை தான் சிங்களவன் செய்யிறான்...

சுகா: yes u r right .. எவ்வளவு ஊடகங்கள் மூலமாக ஈழ மக்களின் துயரங்களை சொன்னாலும் தமிழர்களுக்கு கிரிக்கெட்டும் உள்ளூர் அரசியளும்தான் முக்கியமானதாக இருக்கிறது..

சசி:நம்மை உரிமையை எப்படி கொஞ்சம் கொஞ்சமா பறிச்சு இறுதியில நம்மளை அடிமை ஆக்கினானோ அதே வேலைதான் சிங்கள காடையர்கள் செயிறாங்க...ஹிட்லர் அ விட மோசமான சித்ரவதை கொடுமையை அங்கே இருக்கிற தமிழ் மக்கள் குறிப்பா தமிழ் பெண்கள் அனுபவிக்கிறாங்க...

சுகா: விகடனில் நானும் படித்தேன் . வீழ்வேனென்று நினைத்தாயோ... நல்ல புனைவு

சசி:  இந்த உலகத்துல இதுக்கு மேல ஒரு சித்ரவதை இல்லைன்ற அளவிற்கு ராஜபக்ஷே செஞ்சிட்டு இருக்கான்...இதுக்கு ஒரு முடிவு இணையப் புரட்சியாள முடியும்...

சசி :  ஆமா..ஆனந்த விகடனில் வரும் வீழ்வேனென்று நினைத்தாயோ நம்மள மறுபடியும் யோசிக்க வைக்கும்.

சுகா: தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக ஒன்றுபட வேண்டும்!

சசி : எப்படி பாகிஸ்தானுக்கிட்ட இருந்து பங்களாதேஷ் விடுதலைக்கு இந்தியா உதவுச்சோ...அந்த மாதிரி தமிழ் ஈழத்துக்கு நாம கண்டிப்பா உதவனும்...

சுகா: ஆனா மத்தியில் காங்கிரஸ் இருக்கிற வரைக்கும் அது நடக்காது..

சசி: இல்லையென்றால் சீனாவோட உதவியோட...நம்மள நம்ம இந்தியாவை எதிர்க்க எப்பவும் தயாரா இருக்கான்...அந்த சிங்கள இன வெறியன்...

சசி:  நல்லா சொன்ன..இனி காங்கிரஸ் ன்ற கட்சியே இருக்கக் கூடாது..இதை தான் காந்தி அப்பவே சொன்னார்..விடுதலை அடைந்தபிறகு எதுக்கு இன்னும் இந்த கட்சி என்று...எந்த நோக்கத்துக்காக ஆரம்பித்தோமோ அதை அடைந்து விட்டோம் ..இனி இந்த கட்சியை கலைத்து விடலாம்னு...நேரு கேட்கலை...போதும்..காங்கிரஸ் நாடாண்டது..

சுகா: உண்மைதான் ....

சசி: அன்னா ஹசாறேவோட ரெண்டு உண்ணாவிரதுமும் தோற்றுவிட்டது...பார்த்தியா..இப்போ அவரே அங்கே இருக்கும் மக்கள்கிட்ட சொல்லிடு வராரு..காங்கிரஸ் சுக்கு வோட்டு போடாதிங்க ன்னு...
சசி:  மிகப் பெரிய அயோக்கிய கட்சி காங்கிரஸ்...

they should be kicked out...


கால நேரங்கள் மாற வேண்டும்..
இந்த கால கழிசல்கள் தீர வேண்டும்..
புது நாளாய் யாருக்கும் மாற வேண்டும்..
நம் தமிழர்கள் வாழ்வில் புது அரசியல் மலர்வினைக் காண வேண்டும்! 










Thursday, October 13, 2011

நான் படித்ததிலிருந்து.. (வீழ்வேனென்று நினைத்தாயோ... !)

அது ஒரு நீண்ட பயணம். மானுடம் எத்தனையோ பயணங்களை நிகழ்த்தி இருக்கிறது. இது போன்ற பயணத்தை இதற்கு முன்னர் யாராவது நிகழ்த்தி இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை.. முடிவற்ற பயணத்தை தொடங்கி விட்டார்கள் ஈழத் தமிழர்கள்.. ஆனால் இது அவர்கள் விரும்பிய பயணம் இல்லை.. கட்டாயப்படுத்தி, அவர்கள் மீது திணிக்கப்பட்ட பயணம்...வான்வெளியில் இருந்து விமானங்களும் தரை வழியாக பீரங்கிகளும் அவர்களை துரத்த... மூச்சுவிடக்கூட நேரம் கிடைக்காமல் புறப்பட்ட பயணம். மனைவி, மக்கள், வயது முதிர்ந்த தாய் தந்தை என்று அனைவரையும் வண்டியில் ஏற்றுகிறார்கள். சைக்கிளா, மோட்டார் சைக்கிளா, மாட்டு வண்டியா, டிராக்டரா என்று யோசிக்க அவர்களுக்கு நேரம் இல்லை. அவரவர்களிடம் எது இருக்கிறதோ அதில் பயணத்தை தொடங்கி விட்டார்கள். பயணத்தின் திசை எது? முடிவு எது என்பது தெரியாமலேயே புறப்பட்டு விட்டார்கள். ஆனாலும், அவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கியே திட்டமிட்டு நகர வைக்கப் படுகிறார்கள். செப்டம்பர் 2008  முதல் வாரத்தில் இவர்களின் பயணம் தொடங்கி இருக்க வேண்டும்.
     கிளிநொச்சி யில் புறப்பட்டு முள்ளி வாய்கால் வந்து சேருவதற்கு இவர்களுக்கு ஒன்பது மாதங்கள் தேவைப் பட்டன. 
      நீண்ட இடப் பெயர்வு வாழ்க்கை தந்த மனக் காயங்களை, இன்றுவரை மனதில் தேக்கி வைத்திருக்கும் ஒருவரை நேரில் சந்திக்க நேரிடுகிறது. ஒடிந்து பொய் கிடக்கும் அந்த மனிதரிடம் சில கேள்விகளை கேட்கிறேன், இடப் பெயர்வு பயணம் பற்றி. தடை எதுவும் இல்லாமல் பேசத் தொடங்கி விடுகிறார். நாங்கள் ஓரிடத்தில் தங்குவதற்கான காலத்தை நிச்சயம் செய்வது போர் விமானங்களும் குண்டுகளும் தான் என்று கலக்கத்துடன் சொல்லத் துவங்கிய அவர், அடுத்துக் கூறியவை எனக்குள் வியப்பை தருகிறது.  "இடப் பெயர்வில் எதை மறந்தாலும், கடப்பாரை, மண் வெட்டி, கூடை, கோணிப் பைகளை எடுத்துச் செல்ல மறப்பது இல்லை" என்கிறார்.
     ஆதரவற்ற அந்த மக்களுக்கு உயிர் காக்கும் கவசங்களாக இருப்பவை அந்தக் கருவிகள்தான். எந்த இடத்துக்கு கால் கொண்டு பொய் சேர்க்கிறதோ அங்குப் படுத்துக் கொள்ள ஒரு பதுங்கு குழியை அமைத்துக் கொள்ள இந்தக் கருவிகள்தான் கை கொடுக்கின்றன என்பதால், இவை அவர்களை காக்கும் கருவிகள்!
     பதுங்கு குழிகளை பொதுவாக 'பங்கர்ஸ் ' என்று அந்த மக்கள் அழைக்கிறார்கள். மண் பிளந்து, வியர்வை சிந்தி, மண்ணுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். அவற்றை சுற்றி, நான்கு ஓரங்களிலும் மணல் நிரப்பப்பட்ட மூடைகளை அடுக்கி வைத்து, மண் சரிவை தடுப்பதற்கு கோணிப் பைகள் தேவைப் படுகின்றன. 
     பதுங்கு குழிகள் பரிதாபத்திற்கு உரியவை. வான் மழைக்கும் விமானங்களின் குண்டு மழைக்கும் இடையில், இருவித தாக்குதல்களை மாறி மாறி சந்தித்துக் கொண்டு இருக்கின்றன அவை. குண்டு விழும் கொடுமைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது என்று கூறியவர், "வன்னி பிரதேசத்து தீவிர மழை, நொடிப் பொழுதில் பெரு வெள்ளத்தை உருவாக்கி விடும். பதுங்கு குழிகள் பள்ளம் என்பதால், கண் மூடி , கண் திறப்பதற்குள் அனைத்தையும் நீரில் மூழ்க வைத்து விடும்" என்கிறார்.
     "பதுங்கு குழிகளில் சமையல் செய்ய இயலாது. பூமியின் மேற் பரப்பில்தான் தற்காலிக அடுப்புகளை உருவாக்கி, சமையலை தொடங்க வேண்டும். வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே, எம் பெண் மக்கள் அடுப்பை பற்ற வைப்பார்கள். அடுப்பு சூடேற பாத்திரத்தில் உள்ள அரிசியும் நீரும் கொதிக்க தொடங்கும். ஒரு சமயம் சமையலை முடிக்கும் தருணம், பசி எடுத்த குழந்தைகளின் அழு குரல் கேட்கிறது. உணவு வரும் என்று பதுங்கு குழிக்குள் மற்றவர்கள் காத்திருக்கிறார்கள். வானத்தில் விமானத்தின் உறுமல் கேட்கிறது. குண்டுகள் சீறி விழும் சத்தம் கேட்கிறது. காதைப் பொத்திக் கொள்கிறோம். அமைதி திரும்பிய சிறிது நேரம் கழித்துச் சென்று பார்க்கும் போது, அடுப்பு இருந்த இடத்தில ஒரு பள்ளம் இருக்கிறது. அன்று இரவு முழுவதும் பதுங்கு குழிக்குள் இருந்தவர்கள் அனைவரும் பட்டினிதான்" என்கிறார் சோகமாக. 
     பதுங்கு குழியில் திலீபன் என்ற பதினாறு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட கொடுமைகளை கேட்போம்...
     திலீபன் துடிப்பானவன். ஈழ மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த போராளி திலீபனின் நினைவாக, இவனது பெற்றோர் இந்தப் பெயரை சூட்டியிருக்க வேண்டும். ஈழ மக்கள் பண்பாட்டு பெயர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். இதற்கான முன்னுதாரணமாக திலீபனின் பெற்றோரைக் கூற முடியும். இத்தாலியில் பிறந்த இவனை தமிழ்ப் பண்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்பதற்காக தாய்நாட்டுக்கு அழைத்து வந்தனர். 
     அன்றுதான் தைப் பொங்கல். வெளியே மழை சாரல். துரு துறுவென்று பறந்து திரியும் திலீபனால் பதுங்கு குழியில் அடைந்து கிடக்க முடியவில்லை. இவனது பதுங்கு குழி சாலைப் போக்குவரத்துக்கு அருகில் இருக்கிறது. நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கையில் குடையுடன் புறப்படுகிறான் அவன். நண்பர்களோடு நீண்ட நேரம் உரையாடி மகிழ்ச்சி கொள்கிறான். காலத்தில் திரும்ப வேண்டும் என்று அம்மா சொன்னது அவன் நினைவிற்கு வருகிறது. வன்னிப் பிரதேசத்தின் மழைக்கால பசுமையும் வானம் மெல்ல தூறிக் கொண்டு இருந்த அந்த மாலையில், மனமகிழ்ந்து நடந்து வரும் வேளையில்தான், இதயத்தைக் கிழித்து எரியும் அந்தக் கொடுமையும் நடந்தது. 
     தாயும் தந்தையும் பதற்றம் கொண்டு, அவன் வருகைக்காக பதுங்கு குழியில் வாசலில் காத்து இருக்கிறார்கள். மகன் வருவது தெரிகிறது. முகத்தில் மகிழ்ச்சிப் பொங்க, அவனை அழைத்துச் செல்ல பதுங்கு குழிக்கு வெளியே நடந்து வருகிறார்கள். அந்த நேரம் பார்த்து எரிகணை ஒன்று வேகமாக வந்து அவர்கள் மீது விழுகிறது. திலீபனின் உடல் சிதைந்து ரத்தம் கொட்டுகிறது. அவன் அந்த இடத்திலேயே இறந்து விடுகிறான். அவனது தந்தைக்கு காதருகில் காயம். மயங்கி சுய நினைவை இழந்து விடுகிறார். வயிற்றில் சுமந்த மகனை தன கையில் சுமந்து அடக்கம் செய்கிறாள் தாய்.
    மக்களை மட்டும் அல்ல.. பதுங்கு குழிகளையும் பழி தீர்கிறது சிங்கள ராணுவம். ஓரிடத்துக்கு ராணுவம் விரைந்து வருகிறது என்று தெரிந்தவுடன், மக்கள் இடப் பெயர்வுக்கு தயாராகி விடுகிறார்கள். பிறப்பு, இறப்பு முதலான சுக துக்கங்கள் அனைத்திலும் பங்கேற்று உயிருக்கும் பாதுகாப்பு அளித்த பதுங்கு குழிகளை விட்டு அவர்கள் பிரியத் தொடங்குகிறார்கள். ஆனாலும், பதுங்கு குழிகள் நன்றாகவே arinthu இருக்கின்றன... வெறி கொண்டு வரும் ராணுவ டாங்குகளின் பல் சக்கரங்களில் மிதி பட்டு, தாங்கள் இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகிறோம் என்பதை!


                                                                                             --இன்னும் விதைப்போம் 

Monday, October 10, 2011

நான் படித்ததிலிருந்து.. (வீழ்வேனென்று நினைத்தாயோ... !)

இலங்கையோடு இந்திய தேசிய கீதம் முற்றாக வேறுபட்டு நிற்கிறது. வங்கமும், திராவிடமும், மராட்டியமும் , உஜ்ஜையைனியும் இணைந்த பன்மொழி பேசும் மக்களின் ஒற்றுமைப் பாடலாக இந்திய தேசிய கீதம் அமைந்துள்ளது. இலங்கையின் தேசிய கீதம்  மண்ணைப் பற்றி பாடுகிறது. மரத்தை, மலர்களை, அழகைப்பற்றிப் பாடுகிறது. ஆனால், மனிதனைப் பற்றிப் பாடுவதை நிறுத்திக்கொள்கிறது. மனிதனைப் பற்றிப் பாடினால், சிங்கள மனிதனும் தமிழ் மனிதனும் ஒற்றுமையுடன் வாழ்க என்று வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் வந்து விடும். இதனால், மனிதரைப்   பாடுவதையே கள்ளத் தனமாக நிறுத்திக் கொண்டுவிட்டது இலங்கையின் தேசிய கீதம்.

     இன்றைய முகாமில் சித்ரவதிக் கைதிகளாக உள்ள இந்த இளைஞர்கள், இலங்கையின்  வலிமை மிக்க ஆயுதப்  போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.  என்ஹா தேசியக் கொடியின் அரசியல் தவறு என்றும், அதற்கு நாங்கள் அடிபணிய முடியாது என்றும் ஆயுதம் தூக்கினர்களோ அந்த மொழி புரியாத பாடல்களைப் பாடி, அந்தக் கோடியை வணங்க வேண்டும் என்று துப்பாக்கி முனையில் இப்போது வற்புறுத்தப் படுகிறார்கள். இதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். மறுக்கிறார்கள். சித்ரவதை முகாம் இந்த இளைஞர்களைத் தேசத் துரோகிகளாக அறிவிக்கிறது. ஆத்திரம் அடைந்த இனவெறி ராணுவம், இவர்களைச் சித்ரவதை முகாமுக்கு இழுத்துச் செல்கிறது. அங்கு விரல் நகங்களில் ஊசி ஏற்றப்படுகின்றன. கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு, உடலுக்கு உள்ளேயே, எலும்புகள் முறிந்து விழுகின்றன. மின் அதிர்ச்சியால் மீண்டும் மூட முடியாமல் அப்படியே நின்று போகின்றன விழி ஓர இமைகள்.

     மண்ணுரிமை மூச்சை நெஞ்சில் சுமந்த அந்த இளைஞர்கள் தனது இறுதி மூச்சையும் நிறுத்திக் கொள்கிறார்கள். மரணமுற்ற உடல், ஒவ்வொன்றாக சேகரித்து மறைவான இடங்களில் வைக்கப்பட்டு, நள்ளிரவில் எடுத்துச் செல்லப் படுகின்றன. அந்த உடல்கள் ஒவ்வொனுன்றும் சமரசமற்று, உரிமைக்காகப் போராடிய போராட்ட உணர்வுகளை மட்டும் சொல்லவில்லை. அந்த உடல்களின் மீது நடத்தப்பட்ட ஒரு நூறு சித்ரவதைக் கொடுமைகளை சொல்லிவிட்டுத்தான் செல்கின்றன.

      விடுதலைப் புலிகளின் ராணுவம் சாராத பணிகளில் பங்கேற்று இருத்த ஒருவரின் கதை இது. அனாதைப் பெண் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப் பட்டு உள்ளது. இந்தப் பணியை மிகுந்த மனநிறைவுடன் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார். அந்தக் காலம் தனக்கான வசந்த காலம் என்று இப்போதும் அவரால் கூற முடிகிறது. பராமரிப்பு இல்லத்தில் பணியாற்றும் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்கிறார். பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. முள்ளி வாய்க்கால் நிகழ்வின்போது குழந்திக்கு ஒரு வயது நிறைவு பெறுகிறது. போரின் இறுதி நாட்களில் கணவனையும் மனைவியும் பிரிதுவிடுகிரார்கள். குழந்தை மனைவியிடம் உள்ளது.

     சித்ரவதை முகாம் ஒன்றுக்கு, இவன் இழுத்துச் செல்லப்படுகிறான். புலிப் படையில் ஆயுதம் தாங்கிக் களத்தில் இவன் நின்றதாகப் பதிவு செய்து கொள்கிறார்கள். சித்ரவதைகளைவிடவும் பெரும் வதையில் மனம் சிக்கிச் சின்னாப் பின்னமாகிறது. மனைவி, குழந்தை இருவரின் நிலை என்னவாக இருக்கும் என்ற நினைவில், மனதளவில் ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கிறான். நம்பிக்கை யுடனும் நம்பிக்கை அற்றும் இவனது வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது.

     முகாமில் இருந்து, இவனைத் தப்பிக்க வைக்க, ரகசிய ஏற்பாடு ஒன்று நடை பெறுகிறது. கட்டுக் காவல்கள் எல்லாவற்றையும் கடந்து செல்லுதல் அத்தகைய சுலபமானது அல்ல என்றாலும், அவனுக்குச் சொல்லாப்பட்ட அந்த வழிமுறைகளில் எப்படியும் தப்பிச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை அவனுக்குத் தந்து விட்டது. தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்குரிய முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன.
       நள்ளிரவு. முகாமில் இருந்து பிரிந்து தனியாக நிற்கிறான். மன படபடப்புக்கு  இடையில் ஒரு சிறு சத்தம், ஒரு வாகனம் வருவதைப் போல உணர்கிறான். அந்த வாகனம் எதுவாக இருக்கும்...தன்னிடம் சொலப்பட்ட வாகனம் தானா? அல்லது முகாமின் நள்ளிரவு அதிரடி கண்காணிப்பு வாகனமா? அவனுக்குச் சிறிது கலக்கம் வந்து விடுகிறது. வாகனம் மிகச் சரியாக அவன் அருகில் வந்து நிற்கிறது. அது ராணுவத்தினர் பயன்படுத்தும் வாகனம்தான். அவன் தப்பித்து செல்வதற்கு என்னென்னே செய்ய வேண்டும் என்பது அவனுக்கு முன்னரே தெரிவிக்கப் பட்டு இருந்தது. அதன்படியே அவன் சதம் எதுவும் இன்றி அந்த வாகனத்தில் ஏறிப் படுத்துக் கொள்கிறான். ஏதோ பொருட்கள் அடுக்கி வைக்கப் பட்டு இருந்த லாரி போன்ற வாகனம் அது.

     முகாம் நான்கு அடுக்குப் பாதுகாப்பு வளையங்களைக் கொண்டது. இவை அனைத்தையும் கடந்து சென்ற பின்புதான், அவனுக்கு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்படுகிறது. எப்படித் தூக்கம் வந்தது என்றே தெரியவில்லை. தூங்கிப் போனான். திடீர் என்று ராணுவ வாகனம் குலுங்கி நிற்கிறது. கொஞ்சம் வெளிச்சம் தெரிவதில் இருந்து அதிகாலை என்பதை உணர்ந்து கொள்கிறான். சுற்றிப் பார்த்தபோது அது ஒரு காட்டுப் பகுதி என்பதை உணர்ந்து கொள்கிறான். டார்ச் லைட் ஒன்றின் வெளிச்சம் காட்டி, அவனை வாகனத்தில் இருந்து இறங்கச் சொல்லி, ஒருவன் சைகை காட்டுகிறான். தான் இரவெல்லாம் பயணம் செய்த வாகனத்தை வெளிச்சத்தில் கூர்ந்து கவனித்தான். மின்சாரம் தாக்கியதைப் போல, நிலை குலைந்து போனான்.
     அவனைக் கொண்டு வந்த அந்த வாகனத்தில் இறந்துபோன மனித உடல்கள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கின்றன. எண்ணிக்கையில் 20 க்கும் குறையாது. அவன் இறங்கிக் கொள்கிறான். இங்கு இருந்துதான் அவன் தப்பி செல்ல வேண்டு. அவனால் நடக்கவ்யும் முடியவில்லை. ஓடவும் முடிய வில்லை. அடர்ந்த காட்டில் இருந்து எவ்வாறு, யார் கண்ணிலும் படாமல் வெளியேறுவது என்பதைவிடவும், அந்த நள்ளிரவில் தன்னோடு பயணித்த அந்த உடல்களைப் பற்றியே எண்ணம். சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இவர்கள் அனைவருமே போராளிகள். தன்னுடன் நண்பனாக, தோழனாக, சகோதரனாக வாழ்ந்த உறவுகள்தான். எதனை வீரம் நிறைந்தவர்கள்? அவனது சிந்தனை அதற்கு மேல் செயல்பட மறுத்துவிட்டது. இவை எல்லாவற்றையும் விட வேறொரு கவலைதான் அவனை வதைத்து எடுக்கத் தொடங்கி விட்டது. பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட தன சக பெண் போராளிகளும் கட்டாயம் இதில் இருந்து இருப்பார்கள் என்பதை நினைக்கும்போது, குளிர் நிறைந்த அந்த அதிகாலையிலும்  உடல் வியர்க்கத் தொடங்கியிருந்தது. காலச் சக்கரங்களின் கூறிய பற்களில் ஏன் தமிழ்ச் சமூகம் சிதைக்கப்பட வேண்டும் என்று அவன் யோசிக்கிறான்?
                                                                                                                 (இன்னும் விதைப்போம்)